சந்திரயான்-3 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர்

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) தலைவர் சோம்நாத் தெரிவித்தார். 
சந்திரயான்-3 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர்

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) தலைவர் சோம்நாத் தெரிவித்தார். 

2019 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்( இஸ்ரோ) விண்ணில் செலுத்தியது. 

ஆனால், சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி தரையிறங்காமல் லேண்டர் நிலவின் தரையில் மோதி உடைந்தது. 

அதேநேரத்தில், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு, ஆர்பிட்டர் நிலவை சுற்றிவந்து ஆய்வு செய்வதுடன், பல்வேறு அரிய புகைப்படங்களையும் அனுப்பி வருகிறது. 

இந்நிலையில், சந்திரயான்-2 திட்டத்திலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினை, தேசிய அளவிலான நிபுணா்களின் ஆலோசனை அடிப்படையில், நிலவை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

டெல்லியில் ஒரு நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களுடன் பேசிய இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத், நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - 3 விண்கலம் தயாராக உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

சந்திரயான் 2 இல் ஏற்பட்ட பிரச்னைகள் இதில் இருக்காது. சந்திராயன் 3 மிகவும் வலிமையானதாக உருவாக்கி இருப்பதாகவும், விண்கலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு கருவி பழுதடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியை முன்னெடுத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, ஆர்பிட்டர் நிலவை சுற்றிவருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் விண்கலங்களை மட்டும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 

அடுத்த ஆண்டு தொடக்கத்தில், நாட்டின் முதல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யா' திட்டத்தின் முதல் பரிசோதனையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும், 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என சோம்நாத் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com