தாய்மொழி கண் போன்றவை, பிற மொழிகள் கண்ணாடி போன்றவை: வெங்கையா நாயுடு பேச்சு

தாய்மொழி கண் போன்றது, பிற மொழிகள் கண்ணாடி போன்றவை எனமுன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். 
தாய்மொழி கண் போன்றவை, பிற மொழிகள் கண்ணாடி போன்றவை: வெங்கையா நாயுடு பேச்சு

தாய்மொழி கண் போன்றவை, ஆங்கிலம் போன்ற பிற மொழிகள் கண்ணாடி போன்றவை. கண் பார்வை இருந்தால் தான், கண்ணாடி வேலை செய்யும் என முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். 

தில்லியில் இந்திய ஒளிபரப்பு கூட்டமைப்பின் 'செய்திகளின் எதிர்காலம்'  என்ற கருத்தரங்கின் மாநாட்டின் தொடக்க விழாவில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாடு பங்கேற்று பேசினார். 

அப்போது: செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு 65 உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய செய்தி கூட்டமைப்பு ஆகும். இந்த அமைப்பு நாடு முழுவதும் பிராந்திய ஒளிபரப்பாளர்களிடமிருந்து அதிகபட்ச விளக்கக்காட்சியைக் கொண்டுள்ளது."

கரோனா பெருந்தொற்று நெருக்கடியின் போது ஊடகங்களின் பங்களிப்பை பாராட்டி வெங்கையா நாயுடு, தொற்றின் போது, ​​ஊடகங்கள் பெரும் பங்கு வகித்தன. மருத்துவம் மற்றும் முன்னெச்சரிக்கை போன்ற மக்களுக்கான தகவல்களை ஊடகங்கள் மூலம் கொண்டு சேர்க்க முடிந்தது" என்றார்.

மக்களே முதன்மையான முதலாளிகள்:  செய்தி சேனல்கள் உண்மைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். செய்திகளையும் பார்வைகளையும் பிரிக்க வேண்டும். "செய்திகளுக்கு வண்ணம் கொடுக்காமல், செய்தியாக மட்டுமே இருக்க வேண்டும்." 

"செய்தி சேனல்களில் கூட, சேனல்களுக்கேற்ப காட்சிகள் இருப்பதை காண முடிகிறது. உங்களுக்கு ஒரு பார்வை உள்ளது, ஆனால், அது உங்கள் பார்வையாக மட்டுமே இருக்க வேண்டும். அதை தேசிய பார்வையாக சித்தரிக்க வேண்டாம்' என்றும் அதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்' என்றவர், ஜனநாயகத்தில் மக்களே முதன்மையான முதலாளிகள்." ஊடகங்கள் ஒடுக்கப்பட்ட, மற்றும் குரலற்றவர்களின் குரலாக மாற வேண்டும் என அழைப்பு விடுத்தார். 

மேலும், "நாடாளுமன்றத்தில், உறுப்பினர்களாகிய நீங்கள் எதைச் சொல்ல விரும்புகிறீர்களோ, அதைச் சொல்லுங்கள், பேசுங்கள், அதற்கு உடன்படவில்லை, திருப்தியடையவில்லை என்றால் பின்னர் வெளியேறுங்கள் என்று சொல்வதுண்டு. நான் ஊடகங்களுக்கு கூறுவதும் அதே தான்." ஊடகங்கள் வாதிடவும், எதிர் வாதிடவும் வேண்டும். ஊடகங்கள் உண்மையின் பக்கம் இருக்க வேண்டும், குரலற்றவர்களுக்காக குரல் கொடுப்பவர்களாக வேண்டும். 50 சதவீதம் பேர் பெண்கள். அவர்களின் கவலைகள், பார்வைகள் மற்றும் பிரச்னைகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

'ஊடகம் பற்றிய எனது கருத்துக்கள் எளிமையானவை. ஊடகங்கள் நடுநிலையானவையாக இருக்க வேண்டும். நேர்மையானதாக இருக்க வேண்டும். அதற்கு தேசத்தின் மீது பற்று இருக்க வேண்டும்' என்றார்.

தாய்மொழி கண் போன்றது: மேலும், தாய்மொழி கண் போன்றது. ஆங்கிலம் போன்ற பிற மொழிகள் கண்ணாடி போன்றவை. கண் பார்வை இருந்தால் தான், கண்ணாடி வேலை செய்யும். அதனால்தான் நாட்டில் தாய் மொழிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும், ஏனென்றால் அவை மக்களின் மொழிகள். நான் மாநிலங்களை தலைவராக இருந்தபோது, உறுப்பினர்களிடம், நீங்கள் விரும்பும் எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசலாம் என்று நான் கூறுவதுண்டு. முதலில் தாய்மொழி. பிறகு சகோதர மொழி, பிறகு வேறு எந்த மொழியாக இருந்தாலும் பிரச்னை இல்லை. எனவே மக்களின் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதைதான் மக்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். அதனால்தான் நான் எங்கு சென்றாலும் தாய்மொழி முக்கியத்துவதை வலியுறுத்துகிறேன்" என்றார்.

அதிக மொழி தெரிந்தால் அதிக வாய்ப்பு: நீங்கள் எந்த மொழியிலும் பேசலாம். ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே ஆங்கிலம் தெரியும். மக்கள் தங்கள் தாய் மொழியை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதால் தாய்மொழியில் பேச அனுமதிக்க வேண்டும். மேலும், அதிக மொழி தெரிந்தால் அதிக வாய்ப்பு வரும். மொழி திணிப்போ, எதிர்ப்போ கூடாது என்ற நிலைப்பாடு தேவை என்றும், தாய் மொழியைத் தவிர மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டும் என வெங்கையா நாயுடு கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com