பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ரூம் போட்டு யோசிப்பாங்களோ? கடத்தல்காரர்களின் படைப்பாற்றலை வியக்கும் அதிகாரிகள்

என்ன ஒரு சில இடங்களில் சிக்கிவிடுகிறார்கள். அப்போதுதான் அவர்களது மூளையின் திறன் வெளிஉலகத்துக்குத் தெரிய வருகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:08 pm IST


கொச்சி: மனித வயிற்றுக்குள் தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வரும் மனித மூளையின் திறன் அதோடு நின்றுவிடுமா.. என்ன? விதவிதமாக யோசிக்கிறார்கள். என்ன ஒரு சில இடங்களில் சிக்கிவிடுகிறார்கள். அப்போதுதான் அவர்களது மூளையின் திறன் வெளிஉலகத்துக்குத் தெரிய வருகிறது.

திரிசூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தங்கப் பசையை ஈரமான துண்டில் சுற்றிக் கொண்டு வந்த போதுதான் அவர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

ஃபஹத் (26) என்ற நபர், அக்டோபர் 10ஆம் தேதி துபையிலிருந்து கொச்சி வந்த போது பிடிபட்டார். அவரது உடைமைகளில் சில ஈரத் துண்டு ஒன்று கவரில் போடப்பட்டிருந்ததைப் பார்த்த சுங்கத் துறையினர், அது பற்றி கேட்டனர். அதற்கு தான் விமான நிலைய கழிப்பறையில் குளித்ததாக பதிலளித்தார். இதையடுத்து, மற்றொரு பையிலும் மூன்று ஈரத் துண்டுகள் இருந்ததால் சுங்கத் துறையினருக்கு சந்தேகம் வலுத்தது.

பிறகென்ன செய்வது, அந்த ஈரத் துண்டுகளை வெளியே எடுத்த போது, அதற்குள் தங்கப் பசை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதாவது, தங்கத்தை உருக்கி, அதற்குள் துண்டைப் போட்டு எடுத்துவிடுகிறார்கள். அந்த துண்டுக்குள் தங்க துகள்கள் ஒட்டிக்கொள்கின்றன. பிறகு ஒரு வேதியியல் பொருளைப் பயன்படுத்தி தங்கத்தைத் தனியாகப் பிரித்துவிடுகிறார்கள்  என்று சுங்கத் துறை அதிகாரி கூறினார்.

இதுபோன்று கடந்த மாதம் ஒருவர் பிடிபட்டார். அவர் தான் வைத்திருந்த மரப்பெட்டிக்குள் தங்க முலாம் கொண்டு பெயிண்ட் போல அடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார்.

அண்மையில் வயிற்றுக்குள் தங்கத்தை வைத்துக் கடத்தி வந்தால் பிடிபட்டுவிடுகிறார்கள் என்பதால், விதவிதமாக தங்கக் கடத்தல் நடந்து வருகிறது.

எந்த பழைய முறையையும் கடத்தல்காரர்கள் நீண்ட நாளுக்குப் பயன்படுத்துவதில்லை. ஆனால், வயிற்றில் வைத்து தங்கத்தைக் கடத்தி வருவது மட்டும் அவ்வப்போது நடப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.