குடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

தில்லி சட்டப்பேரவையில் அமளி: பாஜக எம்எல்ஏக்கள் 5 பேர் இடைநீக்கம்

தில்லி சட்டப் பேரவையில் தொடர் அமளில் ஈடுபட்டு வந்த பாஜக எம்எல்ஏக்கள் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :1 செப்டம்பர் 2022, 3:40 pm IST

தில்லி சட்டப் பேரவையில் தொடர் அமளில் ஈடுபட்டு வந்த பாஜக எம்எல்ஏக்கள் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

தில்லி ஆளுநரை பதவி விலக வலியுறுத்தி ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும், மதுவிலக்கு கொள்கை மூலம் ஊழல் செய்ததாகக் கூறப்படும் புகாரில் சிக்கியிருக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதவி விலகக் கோரி பாஜக எம்எல்ஏக்கள் தில்லி சட்டப்பேரவையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இன்று தில்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 58 வாக்குகள் பெற்று கேஜரிவால் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, சட்டப்பேரவையின் வளாகத்தில் அரவிந்த் கேஜரிவாலில் உருவ பொம்மையை எரித்து தொடர் அமளியில் ஈடுபட்ட 5 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.