தில்லி சட்டப் பேரவையில் தொடர் அமளில் ஈடுபட்டு வந்த பாஜக எம்எல்ஏக்கள் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தில்லி ஆளுநரை பதவி விலக வலியுறுத்தி ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும், மதுவிலக்கு கொள்கை மூலம் ஊழல் செய்ததாகக் கூறப்படும் புகாரில் சிக்கியிருக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதவி விலகக் கோரி பாஜக எம்எல்ஏக்கள் தில்லி சட்டப்பேரவையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தில்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 58 வாக்குகள் பெற்று கேஜரிவால் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, சட்டப்பேரவையின் வளாகத்தில் அரவிந்த் கேஜரிவாலில் உருவ பொம்மையை எரித்து தொடர் அமளியில் ஈடுபட்ட 5 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்