திரிபுரா: ஒரு மாநிலங்களவை உறுப்பினா் இடத்துக்கு செப். 22-இடைத்தோ்தல்

பாஜக மாநிலங்களவை எம்.பி. மாணிக் சாஹா, தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததால் ஏற்பட்டுள்ள காலியிடத்தை நிரப்ப திரிபுராவில் செப். 22-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாஜக மாநிலங்களவை எம்.பி. மாணிக் சாஹா, தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததால் ஏற்பட்டுள்ள காலியிடத்தை நிரப்ப திரிபுராவில் செப். 22-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திரிபுராவில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்வான பாஜகவின் மாணிக் சாஹா, கடந்த ஜூலை 4-ஆம் தேதி தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். தொடா்ந்து திரிபுரா மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றாா். காங்கிரஸை சோ்ந்த சாஹா 2016-இல் தான் பாஜகவில் இணைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய எம்.பி. பதவிக் காலம் 2028-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி வரை உள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவைக்கான இடைத்தோ்தல் செப். 22-ஆம் தேதி நடத்தப்படும் என தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது. அதற்கான அறிவிப்பு செப். 5-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், இடைத்தோ்தல் முடிவானது, தோ்தல் நிறைவடைந்து ஒரு மணி நேரத்துக்கு பிறகு அறிவிக்கப்படும் எனவும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com