விசிக தலைவர் தொல். திருமாவளவன், திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து ஓணம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கேரளம் சென்றுள்ள நிலையில் இன்று முதல்வர் பினராயி விஜயனை அவரது இல்லத்தில் சந்தித்து ஓணம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தொல். திருமாவளவன், 'ஓணம் வாழ்த்துத் தெரிவிக்க முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க விருப்பம் தெரிவித்தோம். 15 நிமிடங்களில் அனுமதி கிடைத்தது. உடனே அனுமதியளித்தார் முதல்வர். அவருடைய துணைவியாரை வரவழைத்து அறிமுகம் செய்தார். என்னைக் கண்டதும் ஹேப்பி ஓணம் என்று கூறினார். நன்றி' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்: காவல்துறை விசாரணை!
மேலும், தமிழகம், கேரளத்தில் அரசியல் நிலைமை குறித்துப் பேசினோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.