சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு: பழங்குடியின பெண் காயம்

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் சக்திவாய்ந்த குண்டு வெடிக்கச் செய்ததில் பழங்குடியின பெண் ஒருவர் காயமடைந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். 
சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு: பழங்குடியின பெண் காயம்

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் சக்திவாய்ந்த குண்டு வெடிக்கச் செய்ததில் பழங்குடியின பெண் ஒருவர் காயமடைந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். 

உசூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நெல்லக்கங்கேர் கிராமம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல் கண்காணிப்பாளர் கூறினார். 

பழங்குடியின பெண் கவனக்குறைவாக மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டை காலால் மிதித்ததால், அது வெடித்துப் பலத்த காயமடைந்தார். 

பின்னர், பிஜப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜக்தல்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். 

பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நக்சல்கள் சக்திவாய்ந்த குண்டுகளை மண்ணில் புதைத்து வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com