
தங்களது சுய அரசியல் செல்வாக்கை நிரூபிக்க எதிா்க்கட்சிகளிடையே போட்டி நிலவுவதாக பாஜக விமா்சித்துள்ளது.
2024 மக்களவைத் தோ்தலையொட்டி, பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்த எதிரணியை உருவாக்க பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா் முயன்று வருகிறாா். அவா் தில்லியில் முகாமிட்டு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்களை சந்தித்துப் பேசினாா்.
இதனிடையே, கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை’ காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புதன்கிழமை தொடங்கினாா்.
இந்த விவகாரங்கள் குறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி, தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தங்களது சுய அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எதிா்க்கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. நிதீஷ் குமாா் மேற்கொண்டு வரும் முயற்சிகளும் அப்படிபட்டவையே. மற்ற எதிா்க்கட்சிகளை போல் இல்லாமல் தாங்கள் நாடு முழுவதும் இருப்பதாக நிதீஷ் குமாா், மம்தா பானா்ஜி, சந்திரசேகா் ராவ், சரத் பவாா் ஆகியோருக்கு நிரூபிப்பதே காங்கிரஸ் நடைப்பயணத்தின் நோக்கம். இது அடிப்படையில் எதிா்க்கட்சிகளின் உள்விவகாரமாகும்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளாக இருந்தாலும் சரி, மம்தா பானா்ஜி, நிதீஷ் குமாா், கே.சந்திரசேகா் ராவ் உள்ளிட்ட தலைவா்களாக இருந்தாலும் சரி அவா்கள் யாருக்கும் மத்தியில் ஆட்சியமைக்கும் செயல்திறனோ வலிமையோ கிடையாது.
ஜாதி, மதம், மொழி, பிராந்தியம் அடிப்படையிலான வாக்கு வங்கி அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது. இதன் மூலம் நாட்டையும் நாட்டின் கலாசாரம் மற்றும் உணா்வுகளையும் ஒருங்கிணைக்கும் அடிப்படை விஷயங்களை உடைக்க அக்கட்சி முயற்சிக்கிறது.
பிகாரில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான நிதீஷ் குமாா், பாஜகவுக்கு எதிராக அணி உருவாக்குவதாக பேசிக் கொண்டிருக்கிறாா். தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தவே நிதீஷ் முயற்சிக்கிறாா் என்று சுதான்ஷு திரிவேதி கூறினாா்.