அசாம்: தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது!

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அன்சருல்லா பங்களா அணியுடன் தொடர்புடைய மேலும் இருவரை அசாம் போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அன்சருல்லா பங்களா அணியுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்களை மோரிகான் மாவட்டத்தில் இருந்து அசாம் போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் முசாதிக் உசேன் மற்றும் இக்ராமுல் இஸ்லாம் என அடையாளம் காணப்பட்டனர். 

இக்ராமுல் நாகோன் மாவட்டத்திலும், மோரிகான் மாவட்டத்தில் உள்ள மொய்ராபரி பகுதியைச் சேர்ந்த ஹுசைனை மாநில போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இருவருக்குமே தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு இருப்பதாக மோரிகான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபர்ணா தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com