தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மே 29-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் பாடகா் சித்து மூஸேவாலாவை சிலா் சுட்டுக் கொன்றனா். அவரை 6 போ் கொண்ட கும்பல் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். அவா்களில் மூவரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினா் கைது செய்தனா். மேலும் இருவரை பஞ்சாப் போலீஸாா் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனா்.
இந்நிலையில், மூஸோவாலாவை சுட்டுக் கொன்றவா்களில் ஒருவராகக் கருதப்படும் தீபக் முன்டியை தில்லி காவல் துறை, மத்திய விசாரணை அமைப்புகள் உதவியுடன் பஞ்சாப் காவல் துறை சனிக்கிழமை கைது செய்தது. மேற்கு வங்கம்-நேபாள எல்லையில் தனது இரு கூட்டாளிகளுடன் தீபக் முன்டி கைது செய்யப்பட்டதாக பஞ்சாப் டிஜிபி கெளரவ் யாதவ் ட்விட்டரில் தெரிவித்தாா்.
இந்த நிலையில் தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாடகர் சித்து மூஸேவாலா மரணத்தில் பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் என்ஐஏ இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


