மஸ்கட்டிலிருந்து கொச்சி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென கிளம்பிய புகையால் பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஏமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டிலிருந்து புதன்கிழமை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று கொச்சி புறப்பட்டது. அப்போது திடீரென விமானத்தின் என்ஜினிலிருந்து புகை வெளியேற ஆரம்பித்தது.
இதையும் படிக்க | 'என்னால முடியாது’ விக்ரம் அழைப்பை நிராகரித்த கார்த்தி
இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள் விமானத்தை ஓடுதளத்திலிருந்து வெளியேற்றினர். இந்த புகையால் பயணிகள் 14 பேர் மூச்சுத் திணறலுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
புகை மண்டலத்தால் சூழ்ந்த விமானத்திலிருந்து அவசர கால வெளியேற்றத்தின் மூலம் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பயணிகளை மாற்று விமானத்தில் கொச்சி அழைத்துவருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.