ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆம்புலன்ஸ் தாமதம்: விபத்தில் சிக்கியவரை ஜேசிபியில் தூக்கிச் சென்ற மக்கள்(விடியோ)

விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால், காயமடைந்தவரை ஜேசிபியில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2022, 3:00 am

DIN

விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால், காயமடைந்தவரை ஜேசிபியில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் கட்னி மாவட்டத்தில் பர்ஹி என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால், அங்கிருந்த ஜேசிபி வாகனம் மூலம் காயமடைந்தவரை தூக்கிச் சென்று அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பர்ஹி மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறுகையில்,

ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கும் நிறுவனம் மாற்றப்பட்டதால் உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. அருகிலிருந்த நகரிலிருந்து ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்ததால் தாமதமானது. இப்பகுதியில் புதிய ஆம்புலன்ஸ் கொண்டு வருவதற்கான கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையே ஜேசிபியில் காயமடைந்தவரை தூக்கிச் செல்லும் காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.