விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால், காயமடைந்தவரை ஜேசிபியில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் கட்னி மாவட்டத்தில் பர்ஹி என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால், அங்கிருந்த ஜேசிபி வாகனம் மூலம் காயமடைந்தவரை தூக்கிச் சென்று அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பர்ஹி மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறுகையில்,
ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கும் நிறுவனம் மாற்றப்பட்டதால் உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. அருகிலிருந்த நகரிலிருந்து ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்ததால் தாமதமானது. இப்பகுதியில் புதிய ஆம்புலன்ஸ் கொண்டு வருவதற்கான கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிக்க | கால் கொப்புளங்களால் துவண்டுவிட மாட்டோம்: ராகுல் காந்தி
இதற்கிடையே ஜேசிபியில் காயமடைந்தவரை தூக்கிச் செல்லும் காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் மீண்டும் பெண் நடுவர்கள்!

ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


