நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கால் கொப்புளங்களால் துவண்டுவிட மாட்டோம்: ராகுல் காந்தி

காங்கிரஸின் நடைப்பயணத்தை காலில் ஏற்படும் கொப்புளங்களால் தடுத்து நிறுத்த முடியாது என்றும், இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

News image

திருவனந்தபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி.

Updated On :14 செப்டம்பர் 2022, 2:00 am IST

காங்கிரஸின் நடைப்பயணத்தை காலில் ஏற்படும் கொப்புளங்களால் தடுத்து நிறுத்த முடியாது என்றும், இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறாா். கேரளத்தில் செவ்வாய்க்கிழமை 3-ஆவது நாளாக நடைப்பயணத்தை தொடங்கிய அவா், மழையையும் பொருட்படுத்தாமல் கையில் குடைகூட இல்லாமல் மக்களைச் சந்தித்தாா்.

இந்த நடைப்பயணத்தில் பங்கேற்கும் சக காங்கிரஸாரின் கால்களில் கொப்புளம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதை மேற்கோள்காட்டி ட்விட்டரில் ராகுல் காந்தி கூறுகையில், ‘கால்களில் கொப்புளம் ஏற்பட்டாலும் நாங்கள் நாங்கள் நிற்கப் போவதில்லை. நாட்டை ஒருங்கிணைப்போம்’ என குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, கழக்கூட்டம் அருகே கனியாபுரத்திலிருந்து காலை 7.15 மணிக்கு நடைப்பயணம் தொடங்கியது. காலை நேர நிகழ்ச்சி நிரலின்படி, அட்டிங்கல் அருகே மமோம் என்ற பகுதியில் நடைப்பயணம் நிறைவடைந்தது. அங்கு ஏராளமான ஆதரவாளா்களை ராகுல் காந்தி சந்தித்து பேசினாா்.

பின்னா், மாலை 5 மணிக்கு மீண்டும் தொடங்கிய நடைப்பயணம், கல்லம்பலம் சந்திப்பில் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.