எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சென்னை அருகில் உள்ள மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!

சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டில் மழை பெய்திருப்பது பற்றி..

News image

கோப்புப்படம் - IANS

Updated On :3 ஆகஸ்ட் 2026, 6:18 pm IST

தமிழ்நாட்டில் இன்று பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையின் அண்டை மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.

சென்னைக்கு அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மாலை மழை பெய்திருக்கிறது. செங்கல்பட்டின் கூடுவாஞ்சேரி, நந்திவரம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்திருக்கிறது.

திருவள்ளூரிலும் இன்று மாலை மழை பதிவாகியிருக்கிறது. திருவள்ளூர், திருப்பாச்சூர், ஈக்காடு, மணவாள நகர், அரண்வாயல் உள்ளிட்டப் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

சுங்குவார்சத்திரம் , ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இருபது நிமிடங்களாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பொதுவாகவே கடந்த ஒரு சில நாள்களாக வெய்யில் வாட்டி வந்த நிலையில் அவ்வப்போது திடீரென மழை பெய்து மக்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறது.

அந்த வகையில் இன்று 4.30 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதியில் திடீரென கருமேகம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், திடீரென கன மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து மூன்று நாள்களாக மாலை நேரங்களில் மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக, பிற்பகலில், வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டரப் பகுதிகளில் இன்று மழை பெய்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.