எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

எனது வெற்றி பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்

பிகார் இடைத்தேர்தலில் தன்னுடைய வெற்றி குறித்து பிரசாந்த் கிஷோர் தெரிவித்ததாவது...

News image

பிரசாந்த் கிஷோர் - படம் - ஏஎன்ஐ

Updated On :3 ஆகஸ்ட் 2026, 5:18 pm IST

பிகார் இடைத்தேர்தலில் தன்னுடைய வெற்றி என்பது பாஜக தலைமைக்கான செய்தி என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் மஞ்சள்பூர், மத்திய பிரதேசத்தின் ததியா, பிகாரின் பங்கிப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று (ஆகஸ்ட் 3) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த இடைத்தேர்தலில் பங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரைவிட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது இந்தியத் தேர்தல் ஆணைய இணையதளத்தின்படி, மொத்தமுள்ள 31 சுற்றுகளில் 28 வது சுற்றின் முடிவில் 59,213 வாக்குகள் பெற்று, பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் உள்ளார். மீதம் 3 சுற்றுகளே உள்ள நிலையில், அதில் உள்ள வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் பிரசாந்த் கிஷோரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:

இது சட்டப்பேரவை உறுப்பினரை உருவாக்கும் தேர்தல் அல்ல; பிகாரில் ஒரு நல்ல மனிதர் முதல்வராக வேண்டும். அப்போதுதான் பிகாரில் கல்வியும் வேலைவாய்ப்பும் உருவாகும் என்ற செய்தியை பாஜகவின் தலைமைக்கு உணர்த்துவதற்கான தேர்தல் இது.

மக்கள் இந்தச் செய்தியைத் தந்துள்ளனர். வாக்களித்த மக்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். வாக்களிக்காதவர்களையும் வெற்றிபெற முயற்சிப்பேன். இதில் முக்கியமானது என்னவென்றால், பிகாருக்கு ஒரு நல்ல தலைமை கிடைக்க வேண்டும். இங்கிருந்து மக்கள் இடம்பெயர்வது நிறுத்தப்பட வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

Summary

Jan Suraaj party leader Prashant Kishor stated on Monday (August 3) that his victory in the Bihar by-election is a message to the BJP leadership.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.