அக்.15 முதல் விமானிகளுக்கு போதை சோதனை கட்டாயம் என டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது.
விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் மது அருந்தியுள்ளனரா என்பதை கண்டறியும் சோதனை அக்.15 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மது போதை சோதனை மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனுக்கு எதிராக மேல்முறையீடு
கரோனா பரவல் குறைந்துவிட்டதாலும் விமான சேவை முன்புபோல் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டதாலும் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.