ஊழலுக்கு எதிராக போராடுவதாகக் கூறி பிரதமரும், பாஜகவும் ஆம் ஆத்மியினை அழிக்க முயற்சி செய்வதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற அச்சத்தால் பாஜக தொடர்ந்து ஆம் ஆத்மியினை குறி வைத்துத் தாக்கி வருகிறது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: 60 வயது 'ஸ்பைடர் மேன்'! கயிறு இல்லாமல் கட்டடம் ஏறி அசத்தல்
தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி பிரதிநிதிகளுக்கான முதல் தேசிய அளவிலான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அரவிந்த் கேஜரிவால் இதனை தெரிவித்தார். மேலும், ஆம் ஆத்மியின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களை மோடி தலைமையிலான அரசு ஊழல் புகாரில் சிக்க வைக்க முயற்சிக்கிறது எனவும், ஆம் ஆத்மியின் வளர்ச்சியைத் தடுக்க பாஜக முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது: “ பாஜக குஜராத் தேர்தல் குறித்த அச்சத்தில் உள்ளது. ஆம் ஆத்மியின் செல்வாக்கு பெருகி வருவதால் பாஜக அச்சத்தில் உள்ளது. பிரதமரின் ஊடக ஆலோசகர் ஹிரன் ஜோஷி குஜாரத்தில் உள்ள ஊடகங்கள் ஆம் ஆத்மி குறித்த நிகழ்வுகளை ஒளிபரப்பக் கூடாது என மிரட்டியுள்ளார். அவர் அனுப்பியுள்ள குறுஞ்செய்தி குறித்து ஊடக நண்பர்கள் பலர் என்னிடம் பேசியுள்ளனர். நான் ஜோஷியிடம் ஒன்றுதான் கூற விரும்புகிறேன். யாரேனும் ஒருவர் அந்த குறுஞ்செய்தியினை புகைப்படம் எடுத்து வெளியிட்டால் உங்களது உண்மையான முகம் மக்களுக்குத் தெரியும்.” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நத்தம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதி 2 பேர் பலி: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கும்மிடிப்பூண்டி அருகே சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: ரூ. 4.32 லட்சம் பறிமுதல்!

இந்தோனேசியாவில் பிராம்பனன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

தாதா - சௌரவ் கங்குலி பயோபிக் திரைப்படத்தின் முதல் போஸ்டர்!
விடியோக்கள்

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna


