எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஹைதராபாத்தில் கொடூரம்... பெண் கழுத்தை அறுத்த ஆளும் கட்சி எம்எல்ஏ உதவியாளர்!

ஆசைக்கு இணங்க மறுத்த பெண் ஒருவரின் கழுத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரின் தனி உதவியாளர் அறுத்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:52 pm IST

ஹைதராபாத்: ஆசைக்கு இணங்க மறுத்த பெண் ஒருவரின் கழுத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரின் தனி உதவியாளர் அறுத்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி தெலங்கானா ராஷ்டிர சமிதி சட்டப்பேரவை உறுப்பினர் மாகண்டி கோபிநாத்தின் தனி உதவியாளர் (பொ) விஜயஷிம்ஹா, திங்கள்கிழமை காலை பிஎஸ் மக்தாவில் உள்ள பேகம்பேட்டில் திருமணமான பெண்ணான நிஷாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார், அங்கு தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு அவரை வற்புறுத்தியுள்ளார். 
 
அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த விஜயஷிம்ஹா தன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தாக்கி கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார். 

தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் அந்த பெண்ணின் கணவர் சுராஜ் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் முதல்கட்ட தகவலின்படி, சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்ட நிகழ்ச்சியில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் நிஷா(35) பங்கேற்று நடனம் ஆடியுள்ளார். இதன்மூலம் நிஷா சட்டப்பேரவை உறுப்பினர் உதவியாளர் விஜயஷிம்ஹாவுக்கு அறிமுகமாகியுள்ளார்.

அப்போதிருந்து, விஜயஷிம்ஹா நிஷாவுக்கு நிர்வாண விடியோ அழைப்புகளை செய்து வற்புறுத்தி வந்துள்ளார், தனது அழைப்பை ஏற்க மறுத்தால், கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
 
விஜயஷிம்ஹா ஆளுங்கட்சி எம்எல்ஏவின் உதவியாளராக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக காவல்துறை மீது  குற்றம்சாட்டியுள்ள கணவர் அவரது சுராஜ், எம்எல்ஏவின் உதவியாளர் மூலம் எங்கள் குடும்பத்தினருக்கு தொடர்ந்து கொலை மிரட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.