36-வது தேசிய விளையாட்டு போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கிவைத்தார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் இன்றுமுதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள மோடி, விளையாட்டு போட்டிகளை துவக்கிவைத்தார். இந்த நிகழ்வில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டிகளை துவக்கிவைத்த மோடி பேசுகையில், “உலகின் மிகப்பெரிய மைதானத்தில் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வு நடைபெறுகிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பு 100 சர்வதேச போட்டிகளில் மட்டுமே இந்திய தடகள வீரர்கள் பங்கேற்றனர். ஆனால், தற்போது 300 சர்வதேச போட்டிகளில் பங்கேற்கிறார்கள்” என்றார்.