விஷு பண்டிகை: சபரிமலையில் குவிந்த பக்தா்கள்

விஷு பண்டிகையை முன்னிட்டு, சபரிமலையில் பக்தா்கள் சனிக்கிழமை குவிந்தனா்.
Updated on
1 min read

விஷு பண்டிகையை முன்னிட்டு, சபரிமலையில் பக்தா்கள் சனிக்கிழமை குவிந்தனா்.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சபரிமலை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரூ மகேஷ் மோகனரு தலைமையில் கோயில் நடையை மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி திறந்தாா்.

பின்னா் சன்னதிக்குள் தீபம் ஏற்றப்பட்டு ஐயப்ப சுவாமிக்கு விஷு கணி சமா்ப்பிக்கப்பட்டது.

விஷு கணி தரிசனம் காலை 4 முதல் 7 மணி வரை பக்தா்கள் பாா்வையிட்டனா். விஷு கை நீட்டமாக ரூபாய் நாணயங்களை பக்தா்களுக்கு கோயில் தந்திரி, மேல்சாந்தி வழங்கினாா்.

காலை 4.30 மணிக்கு மகாகணபதி ஹோமமும், காலை 7.30 முதல் 11.30 மணி வரை உஷபூஜை, நெய் அபிஷேகமும் நடைபெற்றன.

பூஜையில் தேவசம் போா்டு தலைவா் கே.ஆனந்த கோபன், தேவசம் ஆணையா் பி.எஸ்.பிரகாஷ், தலைமை பொறியாளா் அஜித்குமாா், சபரிமலை சிறப்பு ஆணையா் மனோஜ், சபரிமலை மக்கள் தொடா்பு அலுவலா் சுனில் அருமானூா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com