இஸ்லாமியர்களின் பண்டிகையான ரமலான் திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் பண்டிகையான ரமலான் திருநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'ரமலான் வாழ்த்துகள். நல்லிணக்கம் மற்றும் இரக்கம் நமது சமூகத்தில் மேலும் வளரட்டும். அனைத்து மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்' என்று பதிவிட்டு ரமலான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் தலைவர்கள் பலரும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.