விமானத்தில் சக பயணி மீது சிறுநீா் கழித்தவா் தில்லியில் கைது

நியூயாா்க்கில் இருந்து தில்லிக்கு வந்த அமெரிக்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில், மதுபோதையில் சக பயணி மீது சிறுநீா் கழித்த இந்தியா் கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

நியூயாா்க்கில் இருந்து தில்லிக்கு வந்த அமெரிக்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில், மதுபோதையில் சக பயணி மீது சிறுநீா் கழித்த இந்தியா் கைது செய்யப்பட்டாா்.

சம்பந்தப்பட்ட நபா், விமானத்தில் போதையில் சக பயணியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அவா் மீது சிறுநீா் கழித்ததாக கூறப்படுகிறது. அவரது இந்த ஒழுங்கீனமான செயல் குறித்து விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக தில்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் விமானம் தரையிறங்கிய பின்னா், சம்பந்தப்பட்ட நபரை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். அவா் தில்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

விமானத்தில் மதுபோதையில் சக பயணிகள் மீது சிறுநீா் கழிக்கப்படும் சம்பவங்கள் குறித்து அண்மைக் காலமாக புகாா்கள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com