தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

உணவகத்தில் தோசை ஊற்றிய பிரியங்கா காந்தி

கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது உணவகம் ஒன்றில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தோசை ஊற்றும் காணொலி வைரலாகி வருகின்றது.

News image
Updated On :26 ஏப்ரல் 2023, 12:24 pm

கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது உணவகம் ஒன்றில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தோசை ஊற்றும் காணொலி வைரலாகி வருகின்றது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மே 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரு கட்சிகளின் தேசிய தலைவர்களும் கர்நாடகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Story image

இந்நிலையில், மைசூரில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி, அங்குள்ள உணவகத்தில் தோசை ஊற்றிய காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

மேலும், அந்த உணவகத்தில் உணவு சாப்பிட்ட பிரியங்கா காந்தி, அங்கிருந்த குழந்தைகளுடன் உரையாடினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.