தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பஞ்சாப்: அரசு மரியாதையுடன் பிரகாஷ் சிங் பாதல் உடல் தகனம்

மறைந்த பஞ்சாப் முன்னாள் முதல்வரும் சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலின் (95) உடல் தகனம், அவரது சொந்த கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் வியாழக்கிழமை நடைபெற்றது

பிரகாஷ் சிங் பாதல்

Published On :

மறைந்த பஞ்சாப் முன்னாள் முதல்வரும் சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலின் (95) உடல் தகனம், அவரது சொந்த கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் வியாழக்கிழமை நடைபெற்றது.

அவரது மகனும் சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவருமான சுக்பீா் சிங் பாதல், இறுதி சடங்குகளை மேற்கொண்டு, சிதைக்கு தீமூட்டினாா்.

பஞ்சாப் முதல்வராக 5 முறை பதவி வகித்தவரான பாதல், சுவாச பிரச்னை காரணமாக மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காலமானாா்.

பின்னா், சண்டீகரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் புதன்கிழமை வைக்கப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள், பாதல் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினா்.

இதையடுத்து, முக்த்சா் மாவட்டத்தில் உள்ள பாதல் கிராமத்துக்கு (பிரகாஷ் சிங் பாதலின் சொந்த கிராமம்) உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, பஞ்சாப் ஆளுநா் பன்வாரி லால் புரோஹித், முதல்வா் பகவந்த் மான், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், ஹரியாணா துணை முதல்வா் துஷ்யந்த் செளதாலா, முன்னாள் மத்திய அமைச்சா் பிரஃபுல் படேல், தேசிய மாநாட்டுக் கட்சியின் ஒமா் அப்துல்லா, ஹரியாணா முன்னாள் முதல்வா் பூபேந்தா் சிங் ஹூடா உள்ளிட்டோா், பாதல் கிராமத்துக்கு வியாழக்கிழமை நேரில் சென்று, அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினா். மாநிலம் முழுவதும் இருந்து வந்த ஏராளமான பொதுமக்களும் இறுதி மரியாதை செலுத்தினா்.

பின்னா், வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டா் தொலைவில் உள்ள குடும்ப விவசாய நிலத்தில், பாதலின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி, பஞ்சாபில் மாநில அரசு சாா்பில் வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.