திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

தில்லி காய்கறி சந்தையை திடீர் விசிட் அடித்த ராகுல்! 

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் உள்ள அசாத்பூர் சந்தைக்கு நேரடியாக சென்று அங்கு மக்களோடு மக்களாக வலம் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:46 am

DIN

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் உள்ள அசாத்பூர் சந்தைக்கு நேரடியாக சென்று அங்கு மக்களோடு மக்களாக வலம் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஆசியாவில் மிகப்பெரிய காய்கறி மொத்த விற்பனை சந்தை வடக்கு தில்லியில் இயங்கி வருகின்றது. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு திடீரென அங்குள்ள சந்தைக்குச் சென்று மக்களோடு மக்களாக சாதாரணமாக நின்றார். 

இதை கண்ட வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து ஆர்வமாக அவரிடம் பேசினர். ராகுல் மக்களிடம் கனிவுடன் பேசியதோடு, காய்கறி, பழங்களின் விலைகள் பற்றி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். 

சமீப காலமாக தக்காளி விலை அதிகரித்துள்ளதையடுத்து, பல இடங்களில் ஒரு கிலோ  ரூ.200-ஐ கடந்துள்ளது. இத்தகைய சூழலில் தக்காளி விலை உயர்வு அதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி அறியும் நோக்கத்தில் ராகுல் காந்தி ஆசாத்பூர் சந்தைக்கு வந்தார். 

முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக இரண்டு நாள் பயணமாக கேரளத்துக்குச் சென்று திரும்பிய ராகுல் ஆசாத்பூர் சந்தைக்கு வருகை தந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.