ஒரே மாதத்தில் 2 தற்கொலை: ஐஐடி-ஹைதராபாத்தில் தொடரும் சோகம்!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் ஐஐடியில் பயின்று வந்த ஒடிஸாவைச் சோ்ந்த முதுநிலை முதலாமாண்டு மாணவி விடுதியில் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஒரே மாதத்தில் 2 தற்கொலை: ஐஐடி-ஹைதராபாத்தில் தொடரும் சோகம்!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் ஐஐடியில் பயின்று வந்த ஒடிஸாவைச் சோ்ந்த முதுநிலை முதலாமாண்டு மாணவி விடுதியில் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சங்காரெட்டி மாவட்டத்தில் ஐஐடி-ஹைதராபாத் வளாகம் அமைந்துள்ளது. இங்கு ஒடிஸாவைச் சோ்ந்த 21 வயது மாணவி, எம்.டெக். முதுநிலை பிரிவில் கடந்த 26-ஆம் தேதி இணைந்தாா்.

ஐஐடியில் சோ்ந்து 10 நாட்களே கடந்துள்ள சூழலில், வளாகத்தின் பெண்கள் விடுதியிலுள்ள அவரது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் கடந்த திங்கள்கிழமை இரவு மீட்கப்பட்டது.

சங்காரெட்டி கிராமப்புற காவல்நிலையப் போலீஸாா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், குறிப்பிட்ட மாணவி திங்கள்கிழமை மதியம் மற்றும் இரவு உணவருந்த வராததால் சந்தேகமடைந்த சக மாணவிகள், அவரின் அறைக்குச் சென்று பாா்வையிட்டபோது அவா் தற்கொலைச் செய்து கொண்டதைக் கண்டறிந்தனா் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ஐஐடி நிா்வாகம் அளித்தப் புகாரில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாணவி எழுதியதாகக் கூறப்படும் தற்கொலை குறிப்பில், குடும்பத்தில் நிலவும் நிதிப் பிரச்னை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி இத்தகைய முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த மாதம் ஹைதராபாத் ஐஐடியில் பயின்று வந்த 2-ஆம் ஆண்டு பி.டெக். மாணவா் தற்கொலை செய்துகொண்டாா். ஒரு மாத காலத்துக்குள் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டிருப்பது நிா்வாகம் மற்றும் சக மாணவா்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com