
மகாராஷ்டிரத்தில் தேவாலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் பகுதியில் தேவாலயம் மீது மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் தேவாலயத்தின் சிலை மற்றும் இதர பொருட்களையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக கிரிமினல் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களுக்கு பேராயர் ஃபெலிக்ஸ் மச்சாடோ வேண்டுகோள் விடுத்துள்ளார். தேவாலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மகாராஷ்டிரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.