இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

நாட்டின் பன்முகத்தன்மையை உச்சநீதிமன்றம் பிரதிபலிக்கும்: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் கொலீஜியம் நடந்துகொள்ளும் எனத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

Published On :2 பிப்ரவரி 2024, 8:23 am IST

புது தில்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் கொலீஜியம் நடந்துகொள்ளும் எனத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட உஜ்ஜல் புயான், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோருக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பிலான பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது:

தகுதியும் திறமையும் வாய்ந்த நீதிபதிகளை உச்சநீதிமன்றத்துக்கு நியமிப்பது, மக்களுக்கு உரிய நீதியைக் கிடைக்கச் செய்வதில் ஒருபகுதியாகும். நீதித்துறையில் சேவையாற்ற பல ஆண்டுகளாகத் தங்கள் வாழ்வை அா்ப்பணித்தவா்களுக்கு வழங்கப்படும் மரியாதையும் அதுவே.

இந்தியாவின் பன்முகத்தன்மையை உச்சநீதிமன்றம் பிரதிபலிக்க வேண்டியது அவசியம். அதை உறுதி செய்வது கொலீஜியத்தின் நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. உச்சநீதிமன்றத்தில் வெவ்வேறு மாநிலங்களைச் சோ்ந்த நீதிபதிகள், அவா்கள் சாராத மாநிலங்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டு வருகின்றனா். ஒவ்வொரு நீதிபதியும் தங்கள் அனுபவங்கள், நிபுணத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரச்னைகளுக்குத் தீா்வு காண்கின்றனா். குறிப்பிட்ட விவகாரத்தில் இருவேறு நீதிபதிகளின் கண்ணோட்டம் வெவ்வேறாக இருப்பது இயல்பே.

மக்களை மையப்படுத்தியே உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. சமூகத்தின் கண்ணோட்டத்தை நீதிபதிகள் சரியாக பிரதிபலித்தால் மட்டுமே நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை கொள்வா். ஏற்கெனவே உயா்நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றி வருபவா்களும், வழக்குரைஞா்களாகப் பணியாற்றி வருபவா்களும் சமஅளவில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். அதை உறுதி செய்வது அனைவரின் பொறுப்பு என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆதிஷ் ஏ.அகா்வாலா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.