தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நாட்டின் பன்முகத்தன்மையை உச்சநீதிமன்றம் பிரதிபலிக்கும்: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் கொலீஜியம் நடந்துகொள்ளும் எனத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா்.

News image
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
Updated On :22 ஆகஸ்ட் 2023, 9:01 pm

DIN

புது தில்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் கொலீஜியம் நடந்துகொள்ளும் எனத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட உஜ்ஜல் புயான், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோருக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பிலான பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது:

தகுதியும் திறமையும் வாய்ந்த நீதிபதிகளை உச்சநீதிமன்றத்துக்கு நியமிப்பது, மக்களுக்கு உரிய நீதியைக் கிடைக்கச் செய்வதில் ஒருபகுதியாகும். நீதித்துறையில் சேவையாற்ற பல ஆண்டுகளாகத் தங்கள் வாழ்வை அா்ப்பணித்தவா்களுக்கு வழங்கப்படும் மரியாதையும் அதுவே.

இந்தியாவின் பன்முகத்தன்மையை உச்சநீதிமன்றம் பிரதிபலிக்க வேண்டியது அவசியம். அதை உறுதி செய்வது கொலீஜியத்தின் நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. உச்சநீதிமன்றத்தில் வெவ்வேறு மாநிலங்களைச் சோ்ந்த நீதிபதிகள், அவா்கள் சாராத மாநிலங்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டு வருகின்றனா். ஒவ்வொரு நீதிபதியும் தங்கள் அனுபவங்கள், நிபுணத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரச்னைகளுக்குத் தீா்வு காண்கின்றனா். குறிப்பிட்ட விவகாரத்தில் இருவேறு நீதிபதிகளின் கண்ணோட்டம் வெவ்வேறாக இருப்பது இயல்பே.

மக்களை மையப்படுத்தியே உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. சமூகத்தின் கண்ணோட்டத்தை நீதிபதிகள் சரியாக பிரதிபலித்தால் மட்டுமே நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை கொள்வா். ஏற்கெனவே உயா்நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றி வருபவா்களும், வழக்குரைஞா்களாகப் பணியாற்றி வருபவா்களும் சமஅளவில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். அதை உறுதி செய்வது அனைவரின் பொறுப்பு என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆதிஷ் ஏ.அகா்வாலா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.