இந்தியா
ஜி-20 மாநாடு: ரிக்ஷாவில் சென்று ஆய்வு செய்த அமைச்சர், மேயர்!
தில்லியில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி அமைச்சர் செளரப் பரத்வாஜ், மேயர் ஷெல்லி ஓபராய் ஆகியோர் ரிக்ஷாவில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தில்லியில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி அமைச்சர் செளரப் பரத்வாஜ், மேயர் ஷெல்லி ஓபராய் ஆகியோர் ரிக்ஷாவில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தில்லியில் வரும் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஜி-20 மாநாடு நடைபெறும் இடம் மற்றும் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் பணிகள் தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜி-20 மாநாட்டிற்கான பணிகளை அமைச்சர் செளரப் பரத்வாஜ் மற்றும் தில்லி ஆணையர் ஷெல்லி ஓபராய் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்குவந்த ரிக்ஷாவில் ஏறி பயணித்தவாறு ஜி-20 மாநாட்டுக்கான பணிகளை ஆய்வு செய்தனர். உடன் வந்த அதிகாரிகள் அவர்களுடன் நடந்து வந்து, முன்னேற்பாட்டு பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.