கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கொச்சியிலிருந்து பெங்களூரு சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கொச்சியிலிருந்து பெங்களூரு சென்ற இன்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பையடுத்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். 

News image
கோப்புப் படம்
Updated On :28 ஆகஸ்ட் 2023, 10:29 am

DIN

கொச்சியிலிருந்து பெங்களூரு சென்ற இன்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பையடுத்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். 

இன்று காலை 6E6482 என்ற விமானம் பெங்களூருவுக்கு காலை 10.30-க்கு புறப்பட திட்டமிடப்பட்டது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து உடனே, சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் இறக்கிவிடப்பட்டன. 

இதையடுத்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரணை நடத்த குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். குண்டுவெடிப்பு குறித்து சம்பவ இடத்துக்கு சோதனை செய்ய மோப்ப நாய் குழுவும் வரவழைக்கப்பட்டது. 

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. அதன்பிறகு பெங்களூருக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. 

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.