நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரையொட்டி தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
குளிா்கால கூட்டத்தொடா் டிசம்பா் 4-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரில் 19 நாள்களில் 15 அமா்வுகள் நடைபெறவுள்ளன. கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளன.
இந்நிலையில், குளிா்கால கூட்டத்தொடா் சுமுகமாகவும் ஆக்கபூா்வமாகவும் நடைபெறும் வகையில், பல்வேறு கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவா்களின் கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் இன்று காலை அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஆளும் பாஜக தரப்பில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3, 4 தேதிகளில் நடைபெறவிருக்கும் நிலையில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் தொடங்குகிறது.