ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

பேருந்து நடத்துநர் மீது பாலியல் வழக்கு

பேருந்தில் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக நடத்துநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2024, 1:20 pm

DIN

தானே: நவி மும்பை பகுதியில் மகாராஷ்டிர மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்தில் பணியாற்றும் நடத்துநர் மீது பாலியல் வழக்கைக் காவலர்கள் பதிவு செய்துள்ளனர்.

17 வயது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டைப் பதிவு செய்ததாகவும் 48 வயதான சந்தோஷ் வாடேகர் என்கிற நடத்துநர் மீது இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது, 17 வயது பெண் தபோலியில் இருந்து மும்பைக்கு நவ.26 மற்றும் 27 தேதிகளில் பயணித்துள்ளார். அதே பேருந்தில் சந்தோஷ் நடத்துநராகப் பணியாற்றியுள்ளார். இரவு நேரத்தில், பெண் தூங்கும்போது அவரைத் தவறாக தொட முயன்றதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகார் குறித்து காவலர்கள் விசாரித்து வருவதாகவும் இன்னும் கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மும்பை காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.