தனி இயக்கம் தொடங்கினார் ரஜினிகாந்தின் மனைவி லதா!பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

வீடில்லாதவர்களுக்கான தற்காலிக முகாம்கள்: குளிர்காலச் செயல் திட்டம்

தில்லியில் குளிர்காலத்தை எதிர்கொள்ள வீடில்லாத மக்களுக்குத் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :6 டிசம்பர் 2023, 5:14 pm IST

குளிர்காலச் செயல் திட்டத்தின் பகுதியாக தில்லி நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியம், தலைநகரில் வீடில்லாதவர்களுக்கான தற்காலிக முகாம்களை ஏற்படுத்தியுள்ளது.

வீடில்லாதவர்களை மீட்க அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் வீட்டுவசதி வாரியம் மட்டுமில்லாது குடிநீர் வாரியம், காவல் துறை உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகள் அடங்கிய குழு இடம்பெற்றுள்ளது. நவம்பர் தொடக்கத்தில் இந்தக் குழு இதற்கான ஏற்பாடுகளைத் திட்டமிடத் தொடங்கியது.

வீடில்லாதவர்களை மீட்கப் பிரத்யேக மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தில்லியின் பல்வேறு இடங்களில் 110 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 15 மீட்புக் குழுக்கள் இந்தப் பணியில் ஈடுபடவுள்ளனர். தேவை கருதி கூடுதலான முகாம்களையும் அமைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இந்தக் குழுக்கள் தில்லியின் வீதிகளில், சாலைகளில் தங்கியிருப்போரை மீட்டு முகாம்களுக்குக் கொண்டு செல்லவுள்ளனர்.

வீடில்லாது தங்கியிருப்பவர்களைப் பற்றி பொதுமக்களும் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கலாம் என்றும் வாட்ஸ் ஆப் எண் முதற்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த வாரியத்தின் 195 குடியிருப்புகளில் 7.092 பேர் தங்கியிருக்கும் நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட 110 முகாம்களில் 2 ஆயிரம் பேர் வரை தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.