பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

நாட்டில் மின் தேவை 8.5 சதவிகிதம் அதிகரிப்பு: ஆர்.கே. சிங் 

2023 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் மின்தேவை 8.5 சதவிகிதம் அதிகரித்து 9,82,233 யூனிட்களாக இருந்தது என்று நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

Published On :6 பிப்ரவரி 2024, 6:52 pm IST

புதுதில்லி: 2023 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் மின்தேவை 8.5 சதவிகிதம் அதிகரித்து 9,82,233 யூனிட்களாக உள்ளது என்று நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் எரிசக்தி தேவை 9,05,443 யூனிட்டுகள் என்று மத்திய மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். இதே காலத்தில் மின் வினியோகம் 8.8 சதவிகிதம் உயர்ந்து 8,99,950ல் இருந்து 9,79,344ஆக உயர்ந்துள்ளது.

2021-22 நிதியாண்டில் 13,79,812 யூனிட்டுகளை விட 2022-23 நிதியாண்டில் மின் தேவை 9.6 சதவிகிதம் அதிகரித்து 15,11,847 யூனிட்களாக இருந்தது. 2022ஆம் நிதியாண்டில் 13,74,024 யூனிட்டுகளாக இருந்த விநியோகம் 9.5 சதவிகிதம் அதிகரித்து 15,04,264 யூனிட்டுகளாக இருந்தது. 2022ஆம் நிதியாண்டில் 1,491.859 ஆக இருந்த மின் உற்பத்தி 2023ஆம் நிதியாண்டில் 1,624.465 பில்லியன் யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

2024ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மின் உற்பத்தி 1,047.439 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. 2013-14ஆம் ஆண்டில் 136 ஜிகாவாட்டாக இருந்த தேவையானது 2023 செப்டம்பரில் 243 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் 2014 முதல் 2023 வரை 194 ஜிகாவாட் திறனை அதிகரித்ததால், மின்சார தேவை அதிகரிப்பை பூர்த்தி செய்ய முடிந்தது என்றார் சிங்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 25 ஜிகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையமும், 15 ஜிகாவாட் ஹைட்ரோ மற்றும் 8 ஜிகாவாட் அணு மின் உற்பத்தி திறன் கொண்ட அணு மின் நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.