புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஜாமீன் மனு: டிச. 21ல் தீர்ப்பு!

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனு மீதான வழக்கில் வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தில்லி நீதிமன்றம் கூறியுள்ளது. 

News image
Updated On :12 டிசம்பர் 2023, 12:12 pm

DIN

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனு மீதான வழக்கில் வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தில்லி நீதிமன்றம் கூறியுள்ளது. 

தில்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி விவகாரத்தில் கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறை கைது செய்தது. 

தற்போது நீதிமன்றக் காவலில் அவர் திஹார் சிறையில் இருக்கிறார். அவரது நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், நேற்று(திங்கள்கிழமை) மீண்டும் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சஞ்சய் சிங்கின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிலையில் இரு தரப்பிலும் வாதம் நடைபெற்றது. இதையடுத்து டிசம்பர் 21 ஆம் தேதி இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது தில்லி நீதிமன்றம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.