வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சமூக சேவகர் மனைவியுடன் தூக்கிட்டுத் தற்கொலை - கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்

கர்நாடகத்தில் சமூக சேவகர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :13 டிசம்பர் 2023, 4:58 pm

DIN

மங்களூரு : கர்நாடகத்தில் சமூக சேவகர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மங்களூரு பகுதியைச் சேர்ந்த சமூக சேவகரான 68 வயதான லீலாதர் ஷெட்டி மற்றும் அவரது மனைவி வசுந்தரா ஷெட்டி(58) ஆகிய இருவரும்  நேற்றிரவு தங்களது வீட்டில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். 

உயிரிழந்த லீலாதர் ஷெட்டி, உடுப்பி பகுதியில் நாடகக் குழு ஒன்றை நடத்தி வந்துள்ளார். மேலும், மஜூர் கிராமப் பஞ்சாயத்து தலைவராகவும் பதவி வகித்தவர். இந்தநிலையில், மக்கள் செல்வாக்கு மிகுந்த நபராக இருந்த லீலாதர் ஷெட்டியின் மரணம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லீலாதர் ஷெட்டி மற்றும் அவரது மனைவி தற்கொலைக்கான காரணம் குறித்து  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.