வல்லப பாய் படேலின் சிந்தனைகள் நமக்குத் தருவது...: யோகி ஆதித்யநாத்

வல்லப பாய் படேலின் நினைவு தினமான இன்று தேசத் தலைவருக்கு அஞ்சலி செலுத்தினார் உத்தர பிரதேச முதல்வர்.
கோப்பு
கோப்பு
Updated on
1 min read

வாரணாசி: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லப பாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

வல்லப பாய் படேலின் நினைவு தினமான இன்று, வாரணாசியில் இரண்டாவது நாள் சுற்று பயணத்தில் இருக்கும் ஆதித்யநாத், மால்தாஹியா பகுதியில் உள்ள படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதையைச் செலுத்தினார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் விடுதலை போராட்ட வீரராக அறியப்பட்ட படேல், இந்தியாவுடன் 563 ராஜ்ய பிரதேசங்களையும் இணைத்ததை நினைவுக்கூர்ந்து பேசினார் முதல்வர்.

அவரது மாநிலமான குஜராத், ஒற்றுமைக்கான அடையாளமாகத் திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

படேலின் முக்கியத்துவத்தை மனதில் வைத்தே பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய சிலையை நர்மதா கரையில் திறந்து வைத்தார் என்றும் இன்றைக்கு அது புனித தளமாகத் திகழ்வதாகவும் படேலின் கருத்தியல் மற்றும் சிந்தனைகள் உத்வேகம் அளிப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com