ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக பஜன்லால் சா்மா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பா்ட் அரங்கில், புதிய முதல்வராக பஜன்லால் சர்மா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் ஒரே கட்டமாக நடைபெற்ற பேரவைத் தேர்தலில், 115 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. அங்கு ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு 69 இடங்களே கிடைத்தன.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, மாநிலத்தின் புதிய முதல்வராக பஜன்லால் சா்மா சில தினங்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று பதவியேற்றுக் கொண்டார். மாநிலத்தின் துணை முதல்வா்களாக தியாகுமாரி, பிரேம்சந்த் பைரவா ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.