வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஜெஎன்.1 வகை கரோனா ஆபத்தானதா? 

ஜெஎன். 1 வகை கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், கோவாவில்தான் அதிக எண்ணிக்கை பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2023, 9:46 am

புது தில்லி: நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 63 பேருக்கு கரோனா வைரஸின் புதிய திரிபான ஜெஎன். 1 வகை கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், கோவாவில்தான் அதிக எண்ணிக்கை பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த ஜெஎன்.1 வைரஸ் பாதிப்பில் கிட்டத்தட்ட 34 பாதிப்புகள் கோவாவில் பதிவாகியிருக்கிறது. மகாராஷ்டிரத்தில் 9 பேருக்கும், கர்நாடகத்தில் 8 பேருக்கும், கேரளத்தில் 6 பேருக்கும், தமிழகத்தில் நான்கு பேருக்கும், தெலங்கானாவில் இருவருக்கும் புதிய வகை கரோனா பாதித்துள்ளது.

இதுவரை பதிவான பாதிப்புகளில் ஒரே இடத்தில் அதிக பாதிப்பு போன்ற எதுவும் இல்லை, மேலும் ஜெஎன்.1 வைரஸ் திரிபு மாறுபாட்டின் அனைத்து நோயாளிகளும் லேசான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாட்டில் கரோனா பாதித்த நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 4,054 ஆக உள்ளது, அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் கேரளத்தில் பதிவாகியிருக்கிறது. இதில் கேரளத்தில் 3128 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் கர்நாடகம் உள்ளது. அங்கு 344 பேர் உள்ளனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் மூத்த விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் பேசுகையில், ஜெஎன். 1 திரிபு கரோனா மிக அபாயமானது என்றோ, இதனால், பாதிப்புகள் அல்லது பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றோ இதுவரை எந்த தகவலும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

தற்போதைய சான்றுகளின் அடிப்படையில் ஜெஎன்.1ஆல் ஒட்டுமொத்தமாக மக்களுக்கு ஏற்படும் ஆபத்து குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.