நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து (ஜன.1)நாளை காலை 9.10 மணிக்கு பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து (ஜன.1)நாளை காலை 9.10 மணிக்கு பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. 

எக்ஸ்போ சாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு பிஎஸ்எல்வி சி58 விண்ணில் ஏவப்படுகிறது. விண்ணில் உள்ள தூசு, நிறமாலை, வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலாவை எக்ஸ்போ சாட் ஆராய உள்ளது. திருவனந்தபுரம் கல்லூரி மாணவிகள் தயாரித்த வெசாட் செயற்கைகக்கோளும் ஏவப்படுகிறது. 

மொத்தம் 469 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியில் இருந்து சுமாா் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுப் பணிகளை முன்னெடுக்க உள்ளது.

இதனிடையே பழவேற்காடு மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் ஏவப்படவுள்ள நிலையில் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com