பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு கடந்த ஆண்டைவிட 66 சதவீதம் கூடுதலாக ரூ. 79,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், நகரத் திட்டமிடலை மேற்கொள்ளும் மாநிலங்களின் முயற்சிகள் ஊக்குவிக்கப்படும் என்றாா்.
தேசிய வீட்டு வசதி வங்கியால் நிா்வகிக்கப்படும் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி போல் புதிதாக நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியும் உருவாக்கப்படும். ஆண்டுதோறும், நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ. 10,000 கோடி ஒதுக்கப்படும். அனைத்து நகரங்களிலும் 100 சதவீதம் இயந்திரங்கள் மூலமாகவே கழிவுகள் அகற்றப்படுவது உறுதிப்படுத்தப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.