பசு அணைப்பு நாள் அறிவிப்பை திரும்பப் பெற்றது விலங்குகள் நல வாரியம்

பசு அணைப்பு நாள் அறிவிப்பை திரும்பப் பெறுவதாக விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

பசு அணைப்பு நாள் அறிவிப்பை திரும்பப் பெறுவதாக விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது. 

இந்திய விலங்குகள் நல வாரியம் காதலா் தினத்தன்று (பிப்.14) பசு அணைப்பு நாளாக கடைப்பிடிக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை விலங்குகள் நல வாரியம் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் இந்திய விலங்குகள் நலவாரியம், வேண்டும் என்றே காதலா் தினத்தன்று பசு அணைப்பு நாளை அறிவித்திருப்பதாகவும் புகார் எழுந்தது. 

பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிப்ரவரி 14ம் தேதி ‘பசு அணைப்பு நாள்’ அறிவிப்பை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com