சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கியது!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கியது!
Published on
Updated on
1 min read

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

நாடு முழுவதும் 16,738 பள்ளிகளில் பயிலும் 16.96 லட்சம் 12ஆம் வகுப்பு மாணவர்களும், 24,491 பள்ளிகளில் பயிலும் 21.86 லட்சம் 10ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

தோ்வறைக்குள் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மாணவா்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘சாட்ஜிபிடி’ தேடுதளத்தை உள்ளடக்கிய மின்னணு சாதனங்களையும் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று தொடங்கியுள்ள தேர்வுகள் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 21ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 5ஆம் தேதியும் நிறைவுபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com