கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலர் கைது!
கேரள முதல்வர் அலுவலகத்தின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம். சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.


கேரள முதல்வர் அலுவலகத்தின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம். சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
திருச்சூர் மாவட்டம் வடக்கன்சேரியில் 140 குடும்பங்களுக்கு ரூ. 18.50 கோடி மதிப்பில் வீடு கட்டும் லைஃப் மிஷன் திட்டத்தில் ரூ. 4 கோடி முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து கடந்த 3 நாள்களாக சிவசங்கரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, நேற்று இரவு கைது செய்தது.
தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...