விளையாட்டில் திறமையுள்ளவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி

விளையாட்டுத் துறையில் திறமை வாய்ந்தவர்களைக் கண்டறிந்து அவர்களின் திறமையை மேம்படுத்த உதவ வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
விளையாட்டில் திறமையுள்ளவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

விளையாட்டுத் துறையில் திறமை வாய்ந்தவர்களைக் கண்டறிந்து அவர்களின் திறமையை மேம்படுத்த உதவ வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்காக மத்திய பட்ஜெட்டில் செலவிடும் தொகையினை அதிகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் விளையாட்டுத் துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி உத்தரப் பிரதேசத்தின் கோராக்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். 

இந்த நிகழ்வில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கிஷான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com