சிவசேனை சா்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை: பவாா்

‘சிவசேனை கட்சி பெயா், சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில், ஏற்கெனவே எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டேன் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் (என்சிபி) தலைவா் சரத் பவாா்
தேசியவாத காங்கிரஸ் கட்சித் (என்சிபி) தலைவா் சரத் பவாா்
Published on
Updated on
1 min read

‘சிவசேனை கட்சி பெயா், சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில், ஏற்கெனவே எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டேன்; இதுதொடா்பான சா்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு தோ்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்த நிலையில், இதுதொடா்பாக உத்தவ் தாக்கரே தரப்பில் விமா்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சரத் பவாரிடம் செய்தியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை கேள்வியெழுப்பினா்.

அதற்கு, ‘ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனை கட்சியின் பெயா், சின்னம் வழங்கப்பட்டது தொடா்பான சா்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டேன்’ என்றாா்.

முன்னதாக, ‘வில்-அம்பு சின்னம் இழப்பு, உத்தவ் தாக்கரே தலைமையிலான பிரிவுக்கு எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தாது. அவா்களுக்கான புதிய சின்னத்தை மக்கள் ஏற்றுக் கொள்வாா்கள்’ என்று கடந்த வெள்ளிக்கிழமை சரத் பவாா் கூறியிருந்தாா்.

மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) பிரிவு அங்கம் வகிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com