சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: 2 காவலர்கள் பலி

சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர்கள் இருவர் பலியாகினர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர்கள் இருவர் பலியாகினர். 

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று(திங்கள்கிழமை) துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இதில், தலைமைக் காவலர் ராஜேஷ் சிங், லலித் குமார் யாதவ் ஆகிய இருவரும் பலியாகினர். பாதுகாப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com