உத்தரப் பிரதேசத்தில் விரைவில் 20 விமான நிலையங்கள்!

உத்தரப் பிரதேசத்தில் விரைவில் 20 விமான நிலையங்கள் அமையவுள்ளன. இதில் 5 விமான நிலையங்கள் சர்வதேச அளவில் அமையவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read


உத்தரப் பிரதேசத்தில் விரைவில் 20 விமான நிலையங்கள் அமையவுள்ளன. இதில் 5 விமான நிலையங்கள் சர்வதேச அளவில் அமையவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக பேசிய உத்தரப் பிரதேச மாநில நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில், மாநில வான்வெளி போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய பணிகள் தொடங்கப்படவுள்ளன. 

தற்போது மாநிலத்தில் 8 விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவைகளிலிருந்து 80 பகுதிகளுக்கு நேரடியாகச் செல்ல முடியும். 

ஜெவார், அயோத்தியா ஆகிய பகுதிகளில் சர்வதேச விமான நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜெவார் விமான நிலையத்தில் ஓடுதளங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை 4 விமான நிலையங்களின் கட்டுமானப் பணிகள் முடிந்துள்ளன. அலிகார், ஆஸம்கார், மொரதாபாத், ஷ்ரவஸ்டி, சித்ரகூட், சோன்பத்ரா ஆகிய 6 நகரங்களில் விரைவில் முடிவடையவுள்ளன எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com