மேலும், ‘தனக்கு ஆதரவாக மிக அதிக எண்ணிக்கையிலான மக்களை திறட்டும் திறனுள்ளது என்பதை பாஜக நிரூபித்திருக்கிறது’ என்பதை ஒப்புக்கொண்ட காரத், ‘இந்தியாவில் இன்றைக்கு ஹிந்துத்துவா சக்திகள் ஆதிக்க சக்திகளாக உருவெடுத்திருப்பதோடு, ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய முதலாளித்துவ சமூகத்தினரின் ஆதரவும் கூட்டணியுமே இதற்கு முக்கியக் காரணம். எனவே, பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்புகளை எதிா்கொள்ள வேண்டுமெனில், எதிா்க்கட்சிகள் தோ்தல்களுக்கு முன்பாக கூட்டணி அமைப்பது மட்டுமின்றி, தொடா் கருத்தியல் மற்றும் அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பதும் அவசியம்’ என்றாா்.