இது தொடர்பாக பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மாநிலத்தின் மக்கள் தொகை மட்டுமல்லாமல், சாதிவாரி பொருளாதார நிலை குறித்தும் அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களை அறிந்து அவர்களை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். அனைவருக்கும் முன்னேற்றம் வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளவர்களுக்கு இதற்காக முறையாக பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியில் அரசுத் துறைகளில் பணிபுரியும் சுமார் 5 லட்சம் பேர் ஈடுபடவுள்ளனர். இந்த ஆண்டு மே இறுதியில் கணக்கெடுப்பு இறுதி செய்யப்படும் எனக் குறிப்பிட்டார்.